Sunday, 10 February 2013

Team India


மும்பை:  ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ஹர்பஜன் சிங் மீண்டும் இடம் பிடித்தார். 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பிப்., 22ல் சென்னையில் துவங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை, சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழு இன்று அறிவித்தது. 
இதில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். சமீபகாலமாக "பார்ம்' இல்லாமல் தவித்து வந்த துவக்க வீரர் காம்பிர் நீக்கப்பட்டுள்ளார். அதிரடி துவக்க வீரர் சேவக் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தவிர, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான் ஆகியோர் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றுள்ளனர். இரானி கோப்பை போட்டியில் சதம் அடித்த ரெய்னா இடம் பெறவில்லை. இவருடைய இடத்தை "ஆல் ரவுண்டர்' ரவீந்திர ஜடேஜா பிடித்தார். 15 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் முரளி விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அணி விவரம்: தோனி (கேப்டன்), சேவக், ஷிகர் தவான், புஜாரா, சச்சின், விராத் கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், அஷ்வின், பிரக்யான் ஓஜா, புவனேஷ்வர் குமார், ரகானே, டிண்டா, முரளி விஜய், இஷாந்த் சர்மா.

No comments:

Post a Comment